உலகம் முழுவதும் கொரோனா தாக்குதல்..! பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.30 கோடி!
World corona cases crossed 1.30 crore
ஜெனீவா:
உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது.
சீனாவின் உகானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 75.79 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 58 ஆயிரத்து 900க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5.71 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் உள்ளது.