டெல்லி: ஜியோவின் பங்குகளை பேஸ்புக் வாங்கியதற்கு என்ன காரணம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கி உள்ளார்.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு துறை நிறுவனமான ரிலையன்ஸ் அம்பானி குழுமத்திற்கு சொந்தமான ஜியோவில் பேஸ்புக் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
43,574 கோடி ரூபாயை முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக் முதலீடு செய்துள்ளது.
இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் டெலிகாம் கீழ் வரும் ஜியோ நிறுவனத்தின் 9.99 சதவீத பங்குகளைப் பேஸ்புக் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
இன்று இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இதற்கான காரணங்களை தற்போது பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கி உள்ளார்.
அதில், உலகில் தற்போது பல விஷயம் நடக்கிறது. ஆனால் நான் இப்போது இந்தியா குறித்து ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
ஜியோவின் பல்வேறு தளங்கள் உடன் பேஸ்புக் இணைந்து செயல்பட உள்ளது.
நாங்கள் ஜியோவில் முதலீடு செய்ய இருக்கிறோம். நாங்கள் இருவரும் பெரிய திட்டங்களை இணைந்து செயல்படுத்த இருக்கிறோம்.
இந்தியாவில் இதன் மூலம் புதிய வியாபாரத்திற்கான வாய்ப்புகள் மக்களுக்கு கிடைக்கும்.
இந்தியா என்பது திறமையான தொழில்முனைவோர்கள், பேஸ்புக், வாட்ஸ் ஆப் என அனைத்துக்கும் பெரிய தளமாக உள்ளது.
இந்தியாவில் மக்கள் இடையே இணையம் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தை கொண்டு சென்றதில் ஜியோ முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் அவர்களிடம் நாங்கள் முதலீடு செய்கிறோம்.
இது மிகவும் முக்கியமான விஷயம். இப்போது இந்தியாவில் இருக்கும் சிறு நிறுவனங்கள் அமைப்புகள் ஆகியோர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.
இந்தியாவில் 60 மில்லியன் மக்கள் இது போன்ற சிறு தொழில்களை நம்பி இருக்கிறார்கள்.
லாக் டவுன் காரணமாக பலரும் டிஜிட்டல் தளம் நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள்.
தங்கள் தொழிலை டிஜிட்டல் மயமாக மாற்றியும் வருகிறார்கள்.
இதை நாங்கள் உதவி செய்து ஊக்குவிக்கலாம் என்று இருக்கிறோம்.
இதனால்தான் நாங்கள் ஜியோவுடன் இணைய இருக்கிறோம்.
இந்தியாவில் இதன் மூலம் புதிய வர்த்தக, வியாபார வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மார்க் ஜுக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் குதிக்க பேஸ்புக் பிளான் செய்துள்ளது என்று தொழில் முனைவோர் யூகிக்கிறார்கள்.