லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டார் விஜய் மல்லையா….! மும்பை சிறையில் அடைப்பு!
Vijay mallaya arrested in india
மும்பை:
லண்டனில் இருந்து விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் 9,000 கோடி கடன் வாங்கியவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. அதனை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்தார். அவருக்கு எதிராக சிபிஐ அமலாக்கத்துறை ஏஜென்சிகள் மோசடி வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
தான் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் உயிருக்கு அச்சுறுத்தல் என்று கூறி லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சிபிஐ தரப்பில் லண்டன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதியளித்தது.
லண்டனில் இருந்து விஜய் மல்லையாவை சிபிஐ அதிகாரிகள் விமானத்தில் அழைத்து வந்தனர். மும்பை வந்து சேர்ந்த விஜய் மல்லையா, ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.