தீவிரமாகும் கொரோனா பாதிப்பு..! குணம் பெற்றோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரம்!
Nearly 88 lakh people cured from corona
ஜெனீவா:
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் பெற்றோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவின் உகானில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் 200 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.
இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 48 லட்சத்து 45 ஆயிரத்து 241 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 53 லட்சத்து 33 ஆயிரத்து 654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 805 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 88 லட்சத்து 98 ஆயிரத்து 749 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.