fbpx
Others

கோபியில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

கன்னியாகுமரிமாவட்டம் கருங்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில், பதிவாளராக பணியாற்றி வரும் ஹரிகிருஷ்ணன் உள்பட 2 பேர் மீது சுண்டவிளை பகுதியை சேர்ந்த ஜஸ்டின் மார்டின் என்பவர் பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயற்சித்தார். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.அதன்படி ஈரோடு மாவட்டம் கோபி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒருங் கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் முன்பு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். கோபி சார்பதிவாளர்கள் ராஜாமுனியப்பன், ராம திலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப் பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close