சீனாவில் தொடங்கியது கொரோனா பாதிப்பு – புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
உலகம் முழுவதும் இன்று கொரோனா வைரஸ் என்ற கொடூர தொற்று நோய் தாக்குதலால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றன. இவ்வாறு உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொரோனாவைரஸ் தொற்றானது சீனாவில் உள்ள உகான் என்ற நகரத்தில் தோன்றியதாகும்.
எனினும் அங்கு ஊரடங்கு அமல்படுத்தியதால் அந்த வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.இவ்வாறு நோய் தொற்று கட்டுக்குள் வந்ததும் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் சீனாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஹிலோங்ஜியான் என்ற மாகாணத்தில் உள்ளூர் அளவில் ஒருவருக்கும், மீதி உள்ள 11 பெரும் வெளிநாட்டு பயண தொடர்பு உடையவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் ஒருவர்கூட சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகவில்லை. ஆனால் 89 பேர் கொரோனா சிகிச்சை முடிவடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 49-ல் இருந்து 8 ஆக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் சீனாவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.ஒருவர் உள்ளூரில் பாதிக்கப்பட்டவர், மற்ற 2 பேர் வெளிநாட்டு தொடர்புடையவர்கள்.
இதுவரை சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82 ஆயிரத்தி 800-ஐ தாண்டியுள்ளது. சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தி 632-ஆக உள்ளது.
உலக அளவில் பார்க்கும் போது 28 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.