87 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்…! 8542 பேர் பலி!
World corona cured cases crosses 87 lakhs
ஜெனீவா:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
சீனாவின் உகானில் கடந்த டிசம்பரில் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 200க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 412 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 52 லட்சத்து 94 ஆயிரத்து 707 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 878 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 8 ஆயிரத்து 542 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 87 லட்சத்து 30 ஆயிரத்து 163 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.