fbpx
GeneralRETrending Nowஇந்தியா

மும்பையில் உயரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…! சீனாவின் உகானை முந்தியது!

Mumbai overtakes chinas wuhan

மும்பை:

கொரோனா தொற்றில் சீனாவின் உகான் நகரை மும்பை முந்தி உள்ளது.

கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. கொரோனாவால் 50 ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பட்டனர். 3 ஆயிரத்து 869 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவின் மும்பையில் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 760 ஆக இருக்கிறது.

மகாராஷ்டிராவின் தகவல்படி 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 259 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மாநிலத்தில் 90,787 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பதிவான தொற்றில் 4ல் ஒரு பகுதியாகும். 42,638 பேர் ஏற்கனவே மிகவும் தொற்று நோயிலிருந்து குணம் பெற்றுள்ளனர்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close