fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

சீனாவில் அறிகுறி இல்லாமல் 23 பேருக்கு கொரோனா..! மருத்துவர்கள் ஷாக்!

In china 23 persons indentified asymptomatic

பெய்ஜிங்:

அறிகுறிகள் எதுவும் இல்லாமல் சீனாவில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த வைரஸ், 200 நாடுகளில் சுற்றி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட சீனாவில் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் தொடங்கி விட்டது. ஆனால் மற்ற நாடுகளில் நிலைமை சீரடையவில்லை.

இந் நிலையில் சீனாவில் எந்த அறிகுறியும் இல்லாமல் 23 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்களில் 19 பேர் உகான் நகரை சேர்ந்தவர்கள். அறிகுறிகளுடன் 2 பேருக்கு தான் கொரோனா உள்ளது. அனைவரும் இப்போது மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close