GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா
இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதிக்கப்படும் கொரோனா மருந்து…!
Covaxin is going test in humans
டெல்லி:
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந் நிலையில், இந்திய பயோடெக் நிறுவனம் தடுப்பு மருந்தில் வெற்றி கண்டிருக்கிறது.
ஐதாராபத்தை சேர்ந்த இந்நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கோவாக்சின் என்ற இந்த மருந்து விலங்குகளிடம் சோதிக்கப்பட்டு உள்ளது.
அதை தொடர்ந்து மனிதர்களிடம் சோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பானது அனுமதி அளித்திருக்கிறது. ஜூலையில் மருந்தின் முதல் மற்றும் 2ம் கட்ட சோதனை நாடு முழுவதும் நடைபெறும்.