RETamil News
சென்னையில் இன்று மட்டும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!
தமிழகத்தில் இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 138 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 906 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 94 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று யாரும் கொரானாவினால் பலியாகவில்லை.
இதுவரை பலி எண்ணிக்கை;27 ஆக உள்ளது.
இன்று 78 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,162-லிருந்து 2,323 ஆக அதிகரித்துள்ளது.