fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

சீனாவில் மீண்டும் கொரோனா…! இன்றும் 28 பேருக்கு பாதிப்பு!

Corona virus spreads in china again

பெய்ஜிங்:

சீனாவில் மீண்டும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் உகானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட  கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவி இருக்கிறது.

உலக நாடுகளில் இதுவரை 4,51,237 பேர் உயிரிழக்க, 4,414,700 பேர் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் 34 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உருவாகவில்லை.

ஆனால் இப்போது 2 இலக்க எண்களில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் தற்போது பாதிப்புகள் உயர்ந்து வருவது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close