GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா
சிந்தியா குடும்பத்தை சந்தித்த கொரோனா…! தாய், மகனுக்கு சிகிச்சை!
Jyotiraditya Scindia corona test positive
டெல்லி:
பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வரும் 19ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிடுகிறார்.
இந் நிலையில் அவருக்கும், தாயார் மாதவி ராஜே சிந்தியாவுக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டெல்லி சாகேத் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 2 பேருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தியதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் நிலையில், சிந்தியாவுக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.