மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றால்? அமித்ஷா

தேசிய தலைவர் அமித்ஷா வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோற்றால் நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும் என அதிர்ச்சி தரும் உரையை அமித்ஷா ஆறியுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அதில் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தைத் துவக்கி வைத்த போதுதான் அமித்ஷா இவ்வாறு பேசினார்.
வரும் மக்களவைத் தேர்தல் 3-வது பானிபட் போருக்கு சமம். இந்த தேர்தலில் பாஜக தோற்றால், நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும்.
1761-ல் மராத்தாக்கல், முகலாலயப்படையிடம் தோற்றதால் தான் இந்திய நாடே 200 ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருக்க வேண்டியதாயிற்று. எனவே, வரும் மக்களவைத் தேர்தல் நாட்டுக்கு மிகவும் முக்கியம்.
மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும். பிரதமர் மோடியை யாராலும் வீழ்த்த முடியாது. அவர் ஒரு போர் வீரன். எத்தனை கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அவரை வீழ்த்த முடியாது.
2014-ஆம் ஆண்டு தேர்தலின் போது வென்ற இடங்களை விட கூடுதல் இடங்களை பாஜக வெல்லும் என அமித்ஷா கூறினார்















