RETamil NewsTrending Nowஉலகம்
அமெரிக்காவில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு…! 9 பேர் பலி… பதற்றம்….!
9 Dead in USA gun fire
சிகாகோ:
அமெரிக்காவில் நடைபெற்ற திடீர் துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அமெரிக்காவில் ஆண்டு தோறும் மே மாத இறுதி திங்கட்கிழமையன்று ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்த வீரர்களை நினைவு கூரும் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்நாள் விடுமுறை என்பதால் சிகாகோ நகரில் வசிக்கும் பொதுமக்கள் ராணுவ அருங்காட்சியகம், நூலகம் செல்வர். இந் நிலையில், சிகாகோ நகரில் நினைவுதின விடுமுறையில் கூடி இருந்தவர்கள் மீது துப்பாக்கியால் மர்ம நபர் சுட 9 பேர் கொல்லப்பட்டனர்.
இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2019ம் ஆண்டு இதேபோன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டர். 43 பேர் காயமடைந்தனர். 2016ம் ஆண்டில் 6 பேரும் பலியாகினர். 2015ம் ஆண்டில் 12 பேரும் கொல்லப்பட்டனர்.