fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

மீண்டும் கொரோனா சிக்கலில் கேரளா…! 24 மணிநேரத்தில் 435 பேர் பாதிப்பு!

435 corona Cases in kerala in 24 hours

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 435 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,873 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 128 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 87 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் மற்றும் 206 பேர் மற்றவர்கள் தொடர்பில் இருந்தவர்கள்.

அம்மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 31 பேர் பலியாகி உள்ளனர். அதிக பட்சமாக பாலக்காடு மாவட்டத்தில் 59 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் 57 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தில் 56 பேருக்கும் பாதிப்பு உள்ளது.

எர்ணாகுளம் மாவட்டத்தில் 50 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 42 பேருக்கும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 40 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 39 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருச்சூர், வயநாடு மாவட்டங்களில் தலா 19 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் 17 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தில் 16 பேருக்கும் கோட்டயம், இடுக்கி மாவட்டத்தில் 12 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 5 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close