fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை..! நிரூபணம் ஆனதாக ரஷிய பிரதமர் அறிவிப்பு!

4 corona injections under safeguard says Russia

மாஸ்கோ:

ரஷியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 4 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த முயற்சியில் ஈடுபட்டுவரும் நாடுகளில் ஒன்றான ரஷியா உள்நாட்டு தயாரிப்பான 4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் பாராளுமன்றத்தில் கூறியதாவது: நாட்டில் மொத்தம் 17 அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக 26 வகையிலான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மனித நல்வாழ்வு கண்காணிப்பதற்கான கூட்டாட்சி சேவையின் தகவலின் அடிப்படையில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளது.

மேலும், இரண்டு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. அதே போல்  மேலும், இரண்டு தடுப்பூசிகள் தொடக்க நிலை பரிசோதனையில் உள்ளன என்று தெரிவித்தார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close