GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
பீகாரில் இடைவிடாது பெய்யும் கனமழை…! மின்னல் தாக்கி 10 பேர் பலி!
3 dead in bihar due to lightening
பாட்னா:
பீகாரில் மின்னல் தாக்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.
பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புர்னியா, பெகுசராய், சம்பாரன், மதேபுரா உள்ளிட்ட பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பீகாரில் கடந்த 3 வாரங்களில் மின்னல் தாக்கியதில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதத்தின் இறுதியில் 21 மாவட்டங்களில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.