வடகொரியா அதிபர் ‘உயிருடன் இருக்கிறார்’ – தென் கொரியா உறுதி
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ‘உயிருடன் இருக்கிறார்’ என்று தென் கொரியா அதிபரின் மூன் ஜே-இன் உயர் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஆதாரங்களின்படி எந்த உறுதியான தகவலும் இல்லை என்றாலும், கிம் இறந்துவிட்டதாக ஹாங்காங் சேட்டிலைட் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதை தொடர்ந்து வட கொரியாவின் தலைவரான கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து தெரிந்துகொள்ள சீனா மருத்துவ குழுவை வட கொரியாவுக்கு அனுப்பியது.
இந்நிலையில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் ” உயிருடன் இருக்கிறார்” என்று தென் கொரிய அதிபரின் மூன் ஜே இன் உயர் பாதுகாப்பு ஆலோசகர் கூறியுள்ளார்.
தென் கொரிய அதிபரின் மூன் ஜே இன்னின் சிறப்பு பாதுகாப்பு ஆலோசகர் மூன் சுங் இன் சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பெட்டியில் குறியிருப்பதாவது;
எங்கள் அரசாங்க நிலைப்பட்டு உறுதியானது.கிம் ஜாங் உன் உயிருடன் நலமாக இருக்கிறார். நாட்டின் கிழக்கில் உள்ள ரிசார்ட் நகரமான வொன்சனில் கிம் தங்கியுள்ளார்.ஏப்ரல் 13 முதல் இதுவரை சந்தேகத்திற்கிடமான விவகாரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளார்.