ஏ.டி.எம் கள் மூலமும் கொரோனா பரவியது – 3 இந்திய ராணுவ வீரர்கள் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும் இந்த நோய் தொற்றானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இந்திய நாடு முழுவதும் தற்போது வரை 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்ட்டுள்ளனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் பரோடாவில் , பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 இராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த 3 இராணுவ வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த மூன்று பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சக வீரர்கள் உட்பட 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இந்த கொரோனா தொற்று எவ்வாறு பரவியது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் , அவர்கள் மூவரும் ஒரே நாளில் ஏ.டி.எம்மில் பணம் எடுத்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
அதனால் அந்த குறிப்பிட்ட ஏ.டி.எம் சீல்வைக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த ஏ.டி.எம்மை பயன்படுத்திய அனைவரும், தாங்களாகவே தனிமை படுத்திக்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அதுமட்டும் அல்லாமல் அப்பகுதி முழுவதும் கொரோனா வைரஸின் ஏதேனும் அறிகுறி தென்பட்டாலும் உடனே குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது.