fbpx
REஇந்தியா

உள்ளாடை கட்டுப்பாடு மாணவிகள் அதிரிச்சி!! சர்ச்சையை உண்டாக்கிய புனே பள்ளி!!

புனேவில் பள்ளி மாணவிகளுக்கு உள்ளாடையில் கட்டுப்பாடுகளை விதித்த பள்ளி நிர்வாகம் தற்போது அந்த கட்டுப்பாடுளை திரும்ப பெற்றுள்ளது.

புனேவின் பிரபல பள்ளியான மெர்ஸ்யில் மாணவிகளுக்கான வழிகாட்டு உரையில் சர்ச்சைக்குரிய உத்தரவுகள் இருப்பதால் மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதவாது மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெள்ளை நிற உள்ளாடை மற்றும் தோல்நிற உள்ளாடையை அணிய வேண்டும் என்ற கட்டளையால் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். மேலும் அதில் மாணவிகளுக்கான ஸ்கர்ட் எத்தனை மீட்டர் நீளம் இருக்க வேண்டும் என்பது முதல்கொண்டு குறிப்பிட்டுள்ளனர். இதை மாணவிகளின் பதிவேட்டில் குறிப்பிட்டு, பெற்றோர்களின் கையப்பம் கட்டாயமாக பெற்று வர வேண்டும், அப்படி பெறவில்லை என்றால் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். பள்ளி வழிகாட்டு உரையில் குறிப்பிட்ட நேரத்தை மீறி மாணவியர்கள் ஒப்பனை அறையை பயன்படுத்தினாலும் தண்டனைகள் வழங்கப்படும் என்கின்றனர்.

இப்பள்ளியின் கரெஸ்பாண்டெண்ட் சுசித்ரா கரத் நகரே இதனை பற்றி தெரிவிக்கையில்,” இதன் நோக்கம் சுத்தமானதே. இது மாணவியரின் பாதுகாப்பிற்காகவே இந்த விதிகள் எல்லாம். இந்த விதியில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் என்னை அணுகலாம், அதனை வைத்து தீர்வு கண்டுபிடிக்கலாம் என்று தெரிவித்தார்.

பெற்றோர்களும் மற்றும் மாணவர்களும் புதன்கிழமை அன்று இதனை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனை குறித்து பள்ளி இயக்குனரிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து மஹாராஷ்டிரா கல்விதுறை அமைச்சர் வினோத் டாவடே தெரிவிக்கையில்,” இந்த பிரச்சனையை பற்றி விசாரணை நடத்த கல்வித்துறைக்கு தெரிவித்துள்ளேன். தேவைப்பட்டால் அவர்களின் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார் இந்த நிலையில் தற்போது பள்ளியின் இந்த சர்ச்சையை கிளம்பிய கட்டுப்பாடு திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close