fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

அமெரிக்காவில் இறந்தவர்களுக்கும் கொரோனா நிதி வினியோகம்…! தணிக்கையில் கண்டுபிடிப்பு!

USA corona fund misused

வாஷிங்டன்:

அமெரிக்காவில் இறந்தவர்களுக்கும் கொரோனா நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு கடந்த மார்ச்சில் 180 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு கொரோனா நிவாரண உதவி திட்டங்களை அறிவித்தது. அதில் உயிரிழந்தோருக்கும் 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது.

அரசு கணக்கு தணிக்கை தலைமையகம் நடத்திய ஆய்வில் இந்த விவகாரம் கண்டுபிடித்துள்ளது.இதையடுத்து இறந்தோர் வாரிசுகளிடம் பணத்தை திருப்பி அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் யாரும் இதுவரை பணத்தை திரும்பத் தரவில்லை. பணத்தை திரும்பத் தர அமெரிக்க சட்டத்தில் இடமில்லை என்பது தான் காரணம் ஆகும். இதையடுத்து இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என்பது குறித்து அமெரிக்க அரசு யோசித்து வருகிறது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close