அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம்…! ராணுவம் வரும் என்று எச்சரித்த டிரம்ப்…!
US president Trump warns protesters
வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பின போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடா விட்டால் ராணுவத்தை அனுப்ப போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அந்நாட்டின் மினசொட்டா மாகாணத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்டார். போலீஸாரின் இந்த செயலை கண்டித்து மினசோட்டாவில் போராட்டம் வெடித்தது. கார்கள் கொளுத்தப்பட்டன.
போலீசாருக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், டெல்லாஸ் என பல மாகணங்களிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந் நிலையில் போராட்டக்காரர்களை அதிபர் டிரம்ப் மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.
ப்ளாயிட் இறப்பிற்கு தகுந்த நீதி கிடைக்கும். நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டியது எனது கடமை. நாட்டின் சட்டதிட்டங்களை நிலைநிறுத்த வேண்டும்.
எனவே போராட்டக்காரர்கள் போராடுவதை கைவிட வேண்டும். இல்லை என்றால் நாட்டை அமைதிப்படுத்த ராணுவத்தை நான் பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.