fbpx
உலகம்

லிபியா அதிபர் கடாபி நிலை கிம்முக்கும் ஏற்படும் ; ட்ரம்ப் எச்சரிக்கை!!!

வாஷிங்க்டன்: அணு ஆயுதங்களை அழிக்கும் ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் கடாபி நிலைதான் வடகொரிய அதிபர் கிம்முக்கு ஏற்படும், என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசவுள்ளனர்.

இந்தச் சந்திப்புக்கு கிம்முக்கு டிரம்ப் பல நிபந்தனைகளை விதித்திருக்கிறார்.அதில் முக்கியமானது அணுஆயுத ஒழிப்புக்கு வடகொரியா அதிபர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது தான்.

இதற்கு கிம் ஒப்புக் கொள்ளவில்லை என்றால், லிபியா அதிபர் கடாபிக்கு ஏற்பட்ட நிலைதான் அவருக்கு ஏற்படும், என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

பத்திரிக்கையாளர்களிடம் டிரம்ப் கூறும்போது,

கடாபியின் அழிவை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் அவரை அழிக்க அங்குச் சென்றோம். ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் அந்த நிலை மீண்டும் ஏற்படும்.

ஆனால் ஒப்பந்தத்துக்கு சம்மதித்துவிட்டால் கிம் ஜோங் உன் சந்தோஷமாக இருப்பார் என்றார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தி வந்தது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது .

ஆனால் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது.

தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அப்போது முதல் வடகொரியா ,; தென் கொரியா உறவில் இணக்கம் ஏற்ப்பட்டது.

இதற்கு அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் பெரிதும் உதவின என்பதும், இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ; வடகொரியா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது என்பதுவும்  குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close