fbpx
GeneralRETamil NewsTrending Nowworldஉலகம்

நாட்டையே உலுக்கிய கேரளா விமான விபத்து..! பாக். பிரதமர் இம்ரான்கான் இரங்கல்!

Pakistan PM imran khan condolence message for kerala accident

இஸ்லாமாபாத்:

கேரளா விமான விபத்து குறித்து பாக். பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்கும் போது விபத்துக்கு உள்ளானது. விபத்தில் ஒரு குழந்தை மற்றும் 2 விமானிகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் அருகிலுள்ள பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் தங்கள் வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கேரளா விமான விபத்து குறித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இம்ரான்கான் , கேரள மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது, அப்பாவி உயிர்களை இழக்க வழிவகுத்ததுள்ளது. துயரமடைந்த குடும்பங்களுக்கு கடினமான நேரத்தில் அல்லாஹ் பலம் தருவார் என பதிவிட்டுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close