RETamil NewsTrending Nowஉலகம்
கருப்பின இளைஞரின் மரணம்…! பதுங்கு குழியில் டிரம்ப்….!
Trump in safe zone
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நடைபெற்ற போராட்டங்களின் போது அதிபர் டிரம்ப் பதுங்கு குழியில் பாதுகாக்கப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மின்னபொலிஸ் நகரில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்கா முழுவதும் 40 நகரங்களில் கலவரம் பரவி உள்ளது. போராடும் மக்களின் மீது நாய்களை ஏவியிருப்பேன் என்ற டிரம்ப் பேச போராட்டங்கள் மேலும் அதிகரித்தன.
அதன் ஒரு பகுதியாக போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடியிருந்தனர். அப்போது, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையின் பதுங்கு குழிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. மெலனியா, பரோன் ஆகியோரும் பதுங்கி குழியில் இருந்தனரா என்பது தெரிவிக்கப்படவில்லை.