RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
சென்னை மற்றும் வேலூர் உள்ளிட்ட 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!
சென்னை மற்றும் வேலூரில் மொத்தம் 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனைகளை நடத்தி வருகின்றது. இவ்வாறு வருமானவரி துறையினர் நடத்தும் அதிரடி சோதனையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
முக்கியமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதிரடியாக சோதனை நடத்தினால்தால் பல்வேறு விஷயங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த சோதனை தமிழக அமைச்சர் ஒருவர் வீட்டிலும் நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.