fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

இந்தியாவில் நுழைந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ,இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியா பயங்கரவாத முகாம் அமைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷமீரின் அந்த முகாம் மீது தாக்குதல் நடத்தியது, இதில் அந்த முகாமின் முக்கிய பகுதி தகர்க்கப்பட்டது. இதற்கு திரும்பி பதிலடி கொடுக்கும் விதத்தில் பாகிஸ்தான் போர் விமானங்களும் இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர்.

உடனே இந்திய விமானங்கள் தீவிரமாக செயல்பட்டு பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டி அடித்தனர். இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.இந்நிலையில் இன்று காலை 11.30 மணி அளவில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ஆளில்லா உளவு விமானம் இந்தியாவில் அத்துமீறி நுழைந்ததது. இந்திய விமான படையின் பாதுகாப்பு ரேடார்கள் இதை உடனே கண்டுபிடித்தனர். பின்னர் அந்த உளவு விமானத்தை இந்திய சுகோய் 30 எம் கே ஐ என்ற விமானம் சுட்டு வீழ்த்தியது.

Related Articles

Back to top button
Close
Close