fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

ஊரடங்கை மீறிய 7.5 லட்சம் பேர் கைது…! 16 கோடி ரூபாய் இதுவரை அபராதம் வசூல்!

Tamilnadu police collected rs 16 crore penalty

சென்னை:

ஊரடங்கை மீறியதாக 5,78,854 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. ஆனால் அந்த உத்தரவை மீறி மக்கள் வெளியே நடமாடி வருகின்றனர். அவர்கள் நடமாட்டத்தை தடுக்க தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க மக்கள் வீட்டுக்குள்ளேயே  இருக்க வேண்டும் என்று அரசு எச்சரித்துள்ளது. அதை மீறி வெளியே சுற்றித் திரிந்த  7,70,299 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

7,04,057 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ. 16,19,27,405 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

Tags

Related Articles

Back to top button
Close
Close