RETamil NewsTrending Nowஉலகம்
ஜெர்மனியில் சமூக இடைவெளி விதிகள்…! ஜூன் 29 வரை நீட்டிப்பு!
Social distancing rules extended in germany
பெர்லின்:
ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர, ஜூன் 29 வரை சமூக இடைவெளி விதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா ஜெர்மனியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 8 ஆயிரத்து 400 பேர் உயிர்க்கொல்லி வைரசுக்கு பலியாகி உள்ளனர்.
இந் நிலையில், ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக, ஜூன் 29ம் தேதி வரை சமூக இடைவெளி விதிகள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.
இது பற்றி ஜெர்மனி ஒப்புதல் வழங்கியுள்ளன. கொரோனா வைரசுடனான தொடர்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.