fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

சாத்தான்குளம் மரண வழக்கில் எஸ்ஐ ரகு கணேஷ் கைது…! தூத்துக்குடி சிறையில் அடைப்பு!

SI raghu ganesh arrested for sathankulam issue

தூத்துக்குடி:

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ. ரகு கணேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க தூத்துக்குடி நீதிபதி உத்தரவிட்டார்.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீசார் விசாரணையின்போது மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். 4 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து, சாத்தான்குளம் எஸ்.ஐ ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பின்  தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.ஐ. ரகு கணேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட ரகு கணேஷ் தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close