கேரளா விமான விபத்து…! தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய சச்சின் அழைப்பு!
Sachin tendulkar about kerala flight accident
மும்பை:
கேரளா விமான விபத்தில் சிக்கியவர்களுக்கு தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய டிவிட்டர் மூலம் சச்சின் அழைப்பு விடுத்துள்ளார்.
துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. விபத்தில் விமான உள்பட 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கோர விபத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் தங்கள் வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தமது டிவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது:
கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில்விபத்துக்குள்ளான விமானத்தில் உள்ள அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன். இந்த துயர விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும், ‘ குண்டோட்டி மெர்சி நிவாரண மருத்துவமனை (Kundotti Mercy Relief Hospital) மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (Kozhikode Medical College Hospital) அனைத்து இரத்தக் குழு நன்கொடையாளர்களும் முன் வந்து ரத்த தானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட டிவிட்டை ரீ-டிவீட் செய்து பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே தனது டிவிட்டர் பக்கத்தில், கோழிக்கோடு விமான விபத்து உண்மையில் சோகமான செய்தி. ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளார்.