கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி 2 வாரங்களில் வெளியீடு..! ரஷ்யா திட்டவட்டம்!
Russia announces about covid 19 vaccine
மாஸ்கோ:
கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் என ரஷ்ய சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்.
உலகின் பொது எதிரியாக மாறியுள்ள கொரோனா வைரசை தடுத்து நிறுத்த முதல் தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா அறிவித்தது. இது உலக அரங்கில் பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக மாஸ்கோவில் சுகாதார அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ கூறி உள்ளதாவது: கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த தடுப்பூசி தானாக போட்டுக் கொள்ள முன்வருவோருக்கு போடப்படும்.
ஏற்கனவே ஏறத்தாழ 20 சதவீத டாக்டர்கள் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி தேவைப்படாது. ரஷ்ய மக்களின் தேவைக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும். அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறினார்.