மோடி அரசு காணாமல் போய்விட்டது…! ராகுல் காந்தி விமர்சனம்!
Rahul Gandhi accuses modi government
டெல்லி:
மோடி அரசை காணவில்லை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை பாதுகாக்க மாநில அரசுகளின் சுகாதார அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 20 லட்சத்தை தாண்டிவிட்டது. இதுவரை 20,25,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7 கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும் லட்சக்கணக்கில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தமது டுவிட்டரில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்து விட்டது, மோடி அரசை காணவில்லை என்று கூறி உள்ளார். இந்த டுவிட்டர் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.