GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை…! மருத்துவர்கள் கண்காணிப்பு!
Pranab mukurjee operation while in corona
டெல்லி:
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மருத்துவமனைக்கு பரிசோதனை ஒன்றிற்காக சென்றபொழுது, எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, கடந்த வரம் என்னுடன் தொடர்பு கொண்டவர்களை தனிமைப்படுத்தவும், கொரோனா பரிசோதனை சோதனை செய்யவும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து இவருக்கு நேற்றிரவு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து, பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.