டெல்லி:
தாங்தார் எல்லைப் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.
லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
தாக்குதல், இரு நாடுகளை மட்டுமின்றி உலக நாடுகளையே பதட்டத்தில் ஆழ்த்தியது.
இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின. அதே நேரத்தில் பாகிஸ்தான் ஜம்மு – காஷ்மீர் நவ்காம் பகுதியில் இந்திய நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
தாங்தார் எல்லைப் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. தொடரும் இந்த தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.