fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

இடைவிடாத மழை…! 2 நாட்கள் மக்கள் வெளியே வர வேண்டாம்..! மும்பை மக்களுக்கு எச்சரிக்கை!

Mumbai people warned by metrology department

மும்பை:

2 நாட்கள் மும்பை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கன மழை பெய்து வருகிறது. இந் நிலையில் மும்பையில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆகையால் இன்றும் நாளையும் மும்பை வாசிகள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மழை ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும் என்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகத்தான் இன்றும் நாளையும் கனமழை மும்பையில் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மும்பை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close