fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

ஜூலை 1 முதல் மத்தியபிரதேச மாநிலத்தில் அதிரடி…! வீடு, வீடாக கொரோனா பரிசோதனை!

Madhya Pradesh kill corona scheme

போபால்:

ஜூலை 1 முதல் மத்திய பிரதேசத்தில் வீடு வீடாக கொரோனா சோதனை நடத்தப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் 12,965 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உள்ளது. 550 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகையால் கொரோனாவை கட்டுப்படுத்த ஜூலை 1 முதல் கில் கொரோனா என்ற பிரசாரம் தொடங்கப்படுவதாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: இந்த பிரசாரத்தின் கீழ், வீடு வீடாக நோய் குறித்த சோதனைகளும், கணக்கெடுப்பும் நடத்தப்படும். 15 நாள் பிரச்சாரம் நடத்தப்படும்.

அப்போது தினமும் 20 ஆயிரம் மாதிரிகள் என 2.5 லட்சம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close