fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

ஜார்க்கண்டில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு…! கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Lockdown extends till july 31st in Jharkhand

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

கொரோனா கட்டுப்பாட்டில் உள்ள சில மாநிலங்கள் ஊரடங்கை தளர்த்தி பொதுப்போக்குவரத்து போன்ற நடைமுறைகளை அமல்படுத்தி வருகின்றன., ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில், இந்த ஊரடங்கை ஜூலை 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.முன்னதாக மேற்கு வங்க மாநிலமும் ஊரடங்கை ஜூலை 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்தது, குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close