Others
திருச்சி-தமிழ்நாடு அரசு அரிசி ஆலை மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கத்தின் பொதுக்குழு
அரிசி விலை உயர்வுக்கு தமிழக அரசே காரணம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளனம் குற்றச்சாட்டு..! தமிழ்நாடு அரசு அரிசி ஆலை மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.மாநில பொதுச் செயலாளர் . மோகன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மத்திய அரசு விதிக்கும் ஜி.எஸ்.டி வரி மற்றும் செஸ் வரி. தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணம் காரணமாக அரிசி விலை உயர்ந்துள்ளது. என்று குற்றம் சாட்டினர்.வரிகளை ரத்து செய்ய வேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் மாநில தலைவர். துளசிங்கம் உள்பட மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.