டெல்லி: கொரோனா பரவலில் இந்தியா சீனாவை முந்தி 11வது இடத்திற்கு சென்றுள்ளது.
சீனாவின் உகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 200க்கும் அதிகமான நாடுகளை ஆக்கிரமித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை கொரோனா ஆட்டி படைக்கிறது.
இந்தியாவில் மகாராஷ்ட்ரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஊரடங்கை மே 17ம் தேதிக்கும் பின், 4வது முறையாகவும் நீட்டிக்க உள்ளது. இருப்பினும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 940 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிப்பில், சீனாவை முந்திய இந்தியா, அதிக பாதிப்பு பட்டியலில் 11வது இடத்தை பிடித்தது.