கொரோனா வைரஸ் ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளனர். அனைத்து முக்கியமான பணிகளும் ஆன்லைனிலேயே செய்யப்படுகின்றன.
மின்சாரத்துக்கான பில், இணையம் தொடர்பான பில்கள் செலுத்த வேண்டுமா அல்லது மொபைல் ரீசார்ஜ் போன்ற பிற வசதிகளை பெற வேண்டுமா, இது போன்ற அனைத்து வேலைகளும் ஆன்லைனில் செய்யப்படுகின்றன.
கூகிளின் டிஜிட்டல் கட்டண தளமான கூகிள் பே அதன் பயனர்களுக்கு புதிய சலுகையை வழங்கியுள்ளது. இந்த புதிய சலுகையின் கீழ், கூகிள் பே பயனர்களுக்கு ரூ .101 கேஷ்பேக் சலுகையாக வழங்கப்படுகிறது.
கூகிள் பே யில் 3 பில்களை செலுத்தும்போது, பயனர்களுக்கு 101 ரூபாய் கேஷ்பேக் திரும்ப கிடைக்கும்.
ஆனால் இதற்கான நிபந்தனை என்னவென்றால், மூன்று பில்கள் வெவ்வேறு வகைகளைச் சார்ந்தவைகளாக இருக்க வேண்டும்.குறைந்தபட்ச தொகை 199 ஆக இருக்கவேண்டும்..