fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

பொருளாதாரத்தை மீட்க மன்மோகனின் முத்தான 3 யோசனைகள்…! பிரதமர் மோடி கேட்பாரா…?

Former PM manmohan singh advise

டெல்லி:

கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் வெகுவாக சரிந்துள்ளது. அதனை மீட்டெடுக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 3 வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுடன் ஆன்லைன் விவாதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது கொரோனா தொற்று காரணமாக இந்திய பொருளாதாரம் சந்தித்துள்ள பொருளாதார இழப்பு பற்றி பேசினார்.

கொரோனாவால், சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்க மூன்று முக்கிய வழிமுறைகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் பரிந்துரைத்தார். அதில், முதலாவதாக மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். அவர்கள் வாங்கும் திறனை அதிகரிக்க அரசு பண உதவி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இரண்டாவதாக, தொழில் செய்வோருக்கு அரசு உதவியுடன் கூறிய கடன் உத்திரவாத திட்டத்தை வழங்க வேண்டும் என அவர் கூறினார். மூன்றாவதாக வங்கி உள்ளிட்ட நிதித்துறை நிறுவனங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அரசு வழங்க வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.

இந்த 3 வழிமுறைகளை பின்பற்றினால், கொரோனாவால் சரிந்துள்ள இந்திய பொருளாதாரத்தை அரசு மீட்டுவிடலாம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close