fbpx
BusinessRETamil News

கடும் சரிவை சந்தித்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு!

மும்பை:

நாட்டின் அன்னிய செலாவணி கைஇருப்பு, சென்ற 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கடும் சரிவைக் கண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு 47 ஆயிரத்து 466 கோடி டாலராக கடும் சரிவை கண்டுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது, இந்திய மதிப்பில் ரூ.36.07 லட்சம் கோடி. கடந்த சில மாதங்களில், அன்னிய செலாவணி இருப்பு தொடர்ந்து உயர்வை சந்தித்துவந்த நிலையில், தற்போது இந்த சரிவை சந்தித்துள்ளது.

கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு 90.2 கோடி டாலர் சரிந்து, 47 ஆயிரத்து 466 கோடி டாலராக இருந்தது. இதற்கு கடந்த வாரத்தில் அன்னிய செலாவணி கைஇருப்பு, 565 கோடி டாலர் அதிகரித்து, 47 ஆயிரத்து 556 கோடி டாலராக உயர்ந்திருந்தது.

பண மதிப்பீடு அடிப்படையில் வெளிநாட்டு பணத்தின் மதிப்பு 54.7 கோடி டாலர் குறைந்து, 43 ஆயிரத்து 912 கோடி டாலராக உள்ளது.

மேலும், மதிப்பீட்டு அடிப்படையில் தங்கத்தின் இருப்பு மதிப்பு, 34 கோடி டாலர் குறைந்து, 3,055 கோடி டாலராக கடுமையாக சரிந்துள்ளது.

இந்திய மதிப்பில் இது ரூ.2.32 லட்சம் கோடி என்று மதிப்பிட்டு கூறப்படுகிறது.

இதனால் டாலரின் மதிப்பு கூடி இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close