fbpx
REஇந்தியா

நீதி ஆயோக் இயக்குனருக்கு கொரோனா! கட்டடத்துக்கு சீல்!!

புது தில்லி:

தில்லியில் உள்ள நீதி ஆயோக் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இயக்குநர் பதவியில் இருந்த நபர் ஒருவருக்கு  கொரோனா  வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து  அந்த கட்டடம் முழுமைக்கும்  48 மணி மணி நேரத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நீதி பவனில் பணியாற்றி வந்த இயக்குநர் பதவியில் இருந்த நபருக்கு கொரோனா இருப்பது இன்று காலை 9 மணிக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக, அவர் பணியாற்றி வந்த கட்டடத்துக்கு 48 மணி நேரத்துக்கு சீல்வைக்கப்பட்டதாக நீதி அயோக் ஆலோசகர் அலோக் குமார்  தகவல் தெரிவித்துள்ளார்.

அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அளிக்கும் அறிவுறுத்தல்கள் முழுவதும் பின்பற்றப்படும்.

அதன்படியே, 48 மணி நேரத்துக்கு கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் அலோக் குமார் தெரிவித்தார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close