GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
மும்பை தாராவியில் கட்டுப்படுத்தப்பட்டது கொரோனா…! அதிகாரிகள் நிம்மதி!
Coroana cases down to one in Mumbai dharavi
மும்பை:
மும்பை தாராவியில் கொரோனா தொற்று கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி மும்பை தாராவி. கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி கொரோனா வைரஸ் பரவியது. 2.5 சதுர கி.மீட்டர் பரப்பில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கும் மக்கள் அடர்த்தி நிறைந்த தாராவியில் கொரோனா ஊடுருவியது பெரும் அதிர்ச்சியை தந்தது.
ஆனாலும் மகாராஷ்டிர அரசு, தாராவியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தியது. அதனால், கடந்த சில வாரங்களாக தாராவியில் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.
இந் நிலையில், தாராவியில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராவியில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,335 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.