RETamil News
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை மையம்!!

சென்னை: தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கூடவே அனல் காற்றும் வீசுவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 55 கிமீ வரை காற்று வீசக்கூடும் என்றும் கடல் அலைகள் 3.5 முதல் 4.6மீ வரை எழும்பும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிகை விடுத்துள்ளது.