GeneralRETamil NewsTrending Nowஉலகம்
பிரேசிலில் உக்கிரமாகும் கொரோனா…! 80 ஆயிரம் பேர் பலி!
Brazil corona dead 80000
பிரேசிலியா:
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா பிரேசிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக, 20,157 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 21 ஆயிரத்து 645 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில், 763 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதையடுத்து இதுவரை 80,251 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,09,202 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 6 லட்சத்து 32 ஆயிரத்து 192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.