மும்பையில் அம்பேத்கர் வீடு மர்மநபர்களால் சேதம்…! விசாரணைக்கு உத்தரவு!
Ambedkar's Mumbai residence attacked by unidentified persons
மும்பை:
மும்பையில் அம்பேத்கர் வீடு மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கூறப்படுவதாவது: அம்பேத்கரின் வீடு மும்பையின் தாதர் பகுதியில் ஹிந்து காலனியில் அமைந்துள்ளது. அவரது வீடு ராஜ்க்ருஹா என அழைக்கப்படுகிறது. அம்பேத்கர் 1930 ம் ஆண்டில் மும்பையில் குடியேறிய போது ராஜ்க்ருஹா கட்டப்பட்டது.
3 தளம் கொண்ட இந்த வீட்டில் தரை தளம் அம்பேத்கரின் தனிப்பட்ட உடமைகளை கொண்டிருக்கும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஒருதளம் அம்பேத்கரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வீட்டின் முகப்பு பகுதியில் இருந்த பூந்தொட்டிகளை தள்ளிவிட்டு சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து போலீஸ் விசாரணைக்கு மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:
தாதரில் உள்ள அம்பேத்கரின் இல்லமான ‘ ராஜ்க்ரூ ‘வி ல் அடையாளம் தெரியாத சில நபர்கள் நடத்திய தாக்குதல் கண்டிக்கத் தக்கது. போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகின்றனர், மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.