fbpx
RETamil News

சென்னையில் உள்ள பள்ளிகள் அனைத்தையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க அதிரடி உத்தரவு!!

சென்னை;

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் , அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னையில் உள்ள சாலைகள், தெருக்கள் மிக குறுகியதாக இருப்பதால் இங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிறது என முதல்வர் பழனிசாமி தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியதாவது;

கொரோனா தடுப்பு பணிகளை மேலும் தீவிர படுத்த பொதுவான இடங்கள் தேவைப்படுவதால் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளை மாநகராட்சியிடம்  வரும்  (மே 2 ம்)  தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என  ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

பெறப்படும் பள்ளிகளில் மருத்துவ பரிசோதனைகள், பாதுகாப்பு கவசங்களை சேர்த்து வைப்பது, மற்றும் தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றுவது என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்றின் உண்மையான நிலை என்ன என்பது தெரியாமல் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close